Wednesday, 20 May 2015

கீ:11 வந்தனம் வந்தனமே

Vanthanam Vanthaname

சங்கராபரணம் 

சாபுதாளம் 

வந்தனம் , வந்தனமே ! தேவ துந்துமி கொண்டிதமே - இது 
வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே , மிகத் தந்தனம் .

1. சந்ததஞ்சந்ததமே , எங்கள் தகுநன்றிக் கடையாளமே - நாங்கள் 
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.

2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே - எங்கள் 
சாமி , பணிவாய் நேமி துதிபுகழ் தந்தனமே நிதமே !

3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே - சத்ய 
சருவேசுரனே , கிருபாகரனே , உன் சருவத்துக்குத் துதியே .

4. உன்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் - பார்த்தால் 
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே .

5. மாறாப் பூரணனே , எல்லா வருடங்களிலும் எத்தனை - உன்றன் 
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே .

                                                                                                             -வே . மாசிலாமணி