Anukraga vaarthaiyode
சங்கராபரணம்
ஆதிதாளம்
1. அனுக்ரக வார்த்தையோடே - இப்போது
அடியாரை அனுப்புமையா !
மனமதில் தயவுறும் மகத்துவபரனே !
வந்தனம் உமக்காமென்.
2. நின்திரு நாமமதில் - கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்.
3. தோத்திரம் புகழ் மகிமை ,- கீர்த்தி
துதி கனம் தினமுமக்கே
பாத்திரமே ; அதிசோபித பரனே !
பாதசரண் ஆமேன் !
ச.ஜெ.சிங்
No comments:
Post a Comment