Saturday, 16 May 2015

கீ:317 (377) அனுக்ரக வார்த்தையோடே

Anukraga vaarthaiyode

 

சங்கராபரணம்

ஆதிதாளம் 

1. அனுக்ரக வார்த்தையோடே - இப்போது 
அடியாரை அனுப்புமையா !
மனமதில் தயவுறும் மகத்துவபரனே !
வந்தனம் உமக்காமென்.

2. நின்திரு நாமமதில் - கேட்ட 
நிர்மலமாம் மொழிகள் 
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச் 
சாமி நின்னருள் புரிவாய்.

3. தோத்திரம் புகழ் மகிமை ,- கீர்த்தி 
துதி கனம் தினமுமக்கே 
பாத்திரமே ; அதிசோபித பரனே !
பாதசரண் ஆமேன் !


ச.ஜெ.சிங்

No comments:

Post a Comment