Jeeva vasanam kooruvom
மோகனம்
ஆதிதாளம்
ஜீவ வசனங் கூறுவோம் ,- சகோதரரே ;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம் .
பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. -ஜீவ
1. பாதகப் பேயின் வலையில் , - ஐயோ ! திரள்பேர்
பட்டு மடியும் வேளையில் ;
பேதைமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே . -ஜீவ
2. காடுதனில் அலைந்தே, - கிறிஸ்தேசு
கர்த்தன் சேவையில் அமர்ந்தே;
நாடு, நகர் , கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய . -ஜீவ
3. விண்ணின் மகிமை துறந்தார் , - கிறிஸ்து நமை
மீட்கக் குருசில் இறந்தார் ;
மண்ணின் புகழ் , பெருமை எல்லாம் தூசுகுப்பை என்
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு. -ஜீவ
4. பூலோகம் எங்கும் நமையே , - கிறிஸ்து நாதர்
போகச் சொல்லி விதித்தாரே ;
காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந் திரிந்து . -ஜீவ
மா. வேதமாணிக்கம்
No comments:
Post a Comment