Saturday, 16 May 2015

கீ: 227 (270) ஜீவ வசனம் கூறுவோம்

Jeeva vasanam kooruvom

மோகனம் 

ஆதிதாளம் 


ஜீவ வசனங் கூறுவோம் ,- சகோதரரே ;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம் .

பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த 
ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே.    -ஜீவ 

1. பாதகப் பேயின் வலையில் , - ஐயோ ! திரள்பேர் 
பட்டு மடியும் வேளையில் ;
பேதைமை யோடு பிடிவாத மருள் மிகுந்து 
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே .     -ஜீவ 

2. காடுதனில் அலைந்தே, - கிறிஸ்தேசு 
கர்த்தன் சேவையில் அமர்ந்தே;
நாடு, நகர் , கிராமந் தேடி நாம் பெற்றடைந்த 
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய .     -ஜீவ 

3. விண்ணின் மகிமை துறந்தார் , - கிறிஸ்து நமை 
மீட்கக் குருசில் இறந்தார் ;
மண்ணின் புகழ் , பெருமை எல்லாம் தூசுகுப்பை என் 
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு.     -ஜீவ 

4. பூலோகம் எங்கும் நமையே , - கிறிஸ்து நாதர் 
போகச் சொல்லி விதித்தாரே ;
காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற 
கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந் திரிந்து .     -ஜீவ 


மா. வேதமாணிக்கம்

 

No comments:

Post a Comment