Vanthanam Vanthaname
சங்கராபரணம்
சாபுதாளம்
வந்தனம் , வந்தனமே ! தேவ துந்துமி கொண்டிதமே - இது
வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே , மிகத் தந்தனம் .
1. சந்ததஞ்சந்ததமே , எங்கள் தகுநன்றிக் கடையாளமே - நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.
2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே - எங்கள்
சாமி , பணிவாய் நேமி துதிபுகழ் தந்தனமே நிதமே !
3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே - சத்ய
சருவேசுரனே , கிருபாகரனே , உன் சருவத்துக்குத் துதியே .
4. உன்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் - பார்த்தால்
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே .
5. மாறாப் பூரணனே , எல்லா வருடங்களிலும் எத்தனை - உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே .
-வே . மாசிலாமணி